தமிழ்நாடு

tamil nadu

கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல இதுதான் சரியான நேரம் - ஏன் தெரியுமா?

By

Published : Apr 14, 2022, 8:16 PM IST

ஆண்டுக்கொருமுறை வரும் சித்ரா பௌர்ணமி நாளில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனமும், சந்திரன் ஒளிரத் தொடங்கும் அரிய நிகழ்வும் நடக்க உள்ளது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் நாளை மறுநாள் (ஏப்.16) ஒரு அதிசயம் நடக்க உள்ளது. ஒரே நாளில் சூரியன் மறையும் நேரத்தில் நிலவு உதிக்கும் அரிதானக் காட்சி நடைபெற உள்ளது. ஒவ்வொரு சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் சூரியன் மறைவதும், பின் அதேநேரத்தில் சந்திரன் உதயமாகி காட்சியளிப்பதும் நடக்கிறது.

இத்தகைய காணக் கிடைக்காத அரியக் காட்சி நாளை மறுநாள் (ஏப்.16) சனிக்கிழமையன்று நடைபெற இருக்கிறது. இதைக் காண ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சித்திரை மாதத்தில் வரும் இந்த சித்ரா பௌணர்மியையொட்டி, கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் உட்பட பல்வேறுகோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட உள்ளன.

இதையும் படிங்க: "பிராஜெக்ட் வரையாடு" திட்டத்தில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - சூழலியல் ஆர்வலர்கள் வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details