கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில், நாட்டின் எல்லைப் பகுதிகள் மற்றும் டெல்லியில் இருப்பதுபோல் மிக உயரமான கம்பத்தில் தேசிய கொடிக்கம்பம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில் மாநிலங்களவை எம்.பி விஜயகுமாரின் நிதியில் இருந்து, கன்னியாகுமரி சமாதானபுரம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா சந்திப்பில் சுமார் 148 அடி உயரம் கொண்ட தேசிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில், இன்று (ஜூன் 29) 48 அடி நீளமும் 32 அடி உயரமும் கொண்ட இந்திய தேசியக்கொடியை தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாநிலங்களவை எம்.பி. விஜயகுமார் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நயினார் நாகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.