கன்னியாகுமரி: மார்த்தாண்டத்தில் இருந்து தமிழ்நாடு - கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதிக்கு செல்லும் அரசுப் பேருந்து இன்று காலை இடைக்கோடு பகுதி சென்றது. அப்போது பேருந்தின் பின்புற வாசல் அருகில் உள்ள வலதுபக்க சீட் கழண்டு விழுந்தது.
அந்த சீட்டில் அமர்ந்திருந்த தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். இதை பார்த்து சக பயணிகள் கூச்சல் போட்டதால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார் . கீழே விழுந்த செல்வராஜ் படு காயங்களுடன் கிடந்ததை பார்த்த சக பயணிகள் மீட்டு அதே பேருந்தில் ஏற்றி கன்னுமாமூடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சேர்த்தனர்.