மகாத்மா காந்தியடிகளின் மறைவிற்கு பின்னர் 1948 பிப்ரவரி 12ஆம் தேதி அவரது அஸ்தி கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்ட இடத்தில் 1956ஆம் ஆண்டு நினைவு மண்டபம் எழுப்பட்டது. இந்த மண்டபம் அமைந்து பல ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை சிலமுறை மட்டுமே பராமரிப்பு, வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்றுள்ளன.
மோசமான நிலையில் காந்தி மண்டபம்
இந்நிலையில், இன்று காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் வேளையில், அவரை மறந்தது போன்று நினைவு மண்டபத்தையும் மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும் அளவில் அந்த மண்டபம் மிக மோசமான நிலையில் உள்ளது.