கன்னியாகுமரியில் உயரமான கொடி கம்பத்தில் பெரிய அளவிலான தேசிய கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும் என்பது அம்மாவட்ட மக்களின் நீண்டநாள் ஆசையாக இருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் விஜயகுமார் எம்பி 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 148 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை நாட்டி அதில் தேசிய கொடியை பறக்கவிட திட்டம் தீட்டி அந்த திட்டத்தை மத்திய அரசின் பரீசலனைக்காக அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், இன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய பொது மேலாளர் ராகேஷ் குமார் சிங், விஜயகுமார் எம்பி உள்ளிட்ட பலரும் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். தேசிய கொடி கம்பம் அமையவுள்ள பகுதிகளை அளவை செய்த அலுவலர்கள் குழு இந்த ஆய்வு குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வழங்கிய பின் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.