கன்னியாகுமரி: குளச்சல் நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தாம்சன் என்பவரை முறைகேடுகள் செய்து அதே திமுகவை சேர்ந்த நஸீர் என்பவர் வெற்றி பெற்று குளச்சல் நகர்மன்ற தலைவராகப் பதவி ஏற்றதாக கவுன்சிலர் சார்பில் குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று(அக்.26)குளச்சல் நகர்மன்ற அவசரக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதுமே கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு குளச்சல் நகர்மன்ற தலைவர் நஸீர் பதில் அளிக்க முடியாமல் கூட்டத்திலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து 13 திமுக கவுன்சிலர்கள் ஒரு சுயேச்சை கவுன்சிலர் உட்பட 14 கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நகராட்சி ஆணையர் விஜயகுமாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.