மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு கடந்த ஏழாம் தேதி, பயணி ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அவருக்கு, பயணச் சீட்டு இயந்திரம் மூலம் வழங்கப்பட்ட டிக்கெட்டில் மார்த்தாண்டம் - தக்காளி என்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதேபோல் ஆங்கிலத்திலும் 'THAKKALI' என (தக்காளி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'தக்காளின்னு ஒரு ஊரா?' - பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த அரசுப் போக்குவரத்துக் கழகம் - thakkalai
கன்னியாகுமரி: தக்கலை என்ற ஊரின் பெயருக்குப் பதிலாக 'தக்காளி' என்று பயணச் சீட்டில் இருந்ததால் பயணி அதிர்ச்சியடைந்தார்.
!['தக்காளின்னு ஒரு ஊரா?' - பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த அரசுப் போக்குவரத்துக் கழகம் thakkali](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6052998-thumbnail-3x2-ticket.jpg)
thakkali
முன்னதாக, தக்கலை என்ற பெயரை, ஆங்கிலத்தில் THUCKALAY என எழுதுவதால் குழப்பம் ஏற்படுகிறது. அதை வெளியூரைச் சேர்ந்தவர்கள் துக்கலை, துக்காலே என மொழிபெயர்க்கிறார்கள். அதனால், THAKALAI என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அனைவருக்கும் நல்லது என்று, தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி பத்மநாபபுரம் நகராட்சி அனுப்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.