தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2020, 8:00 PM IST

ETV Bharat / state

வில்சனை கொலை செய்தவர்கள் கேரளாவில் பதுங்கல்!

குமரி: உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தவர்கள் கேரளாவில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இஜாஸ் பாட்ஷா  பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷா  si wilson murder case  si murder gun supply  terrorist stayed in kerala said by south zone ig
வில்சனை கொலை செய்தவர்கள் கேரளாவில் நடமாட்டம்

ஜனவரி 8ஆம் தேதி குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து துப்பு துலங்க அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பேர் வில்சனைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதனை அடிப்படையாக கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரைத் தேடப்படும் குற்றவாளிகளாக தமிழ்நாடு, கேரளா காவல்துறையினர் அறிவித்தனர். மேலும், அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கொலை நடந்து ஆறுநாட்கள் கடந்த நிலையில் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படாதது காவலர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு காவலர்களிடம் கொலையாளிகள் சிக்காத சூழல் நிலவி வந்தால், விரைவில் இந்த வழக்கை நேரடியாக என்.ஐ. ஏ. அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் கொலையாளிகளுக்கு தொடர்புகள் இருப்பதால் மூன்று மாநிலங்களிலும் தனிப்படையினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். இருவரின் கடவுச்சீட்டுகளும் முடக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வெளிநாடு தப்புவதற்கு வாய்ப்பில்லை.

அவர்கள் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவலர்கள் கேரளாவில் முகாமிட்டு தேடிவருகின்றனர். இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரனிடம் கேட்டபோது, "வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் ஆறு நாட்களாகியும் பிடிபடவில்லை.

அவர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளோம். கேரளாவில் அவர்கள் பதுங்கியிருப்பது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இருவரையும் காவலர்கள் நெருங்கிவிட்டனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details