தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன்

கன்னியாகுமரி: பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கன்னியாகுமரி வந்தார்.

By

Published : Jan 13, 2020, 10:31 AM IST

tamilisai-sounderrajan-at-kanyakumari
tamilisai-sounderrajan-at-kanyakumari

கன்னியாகுமரி அருமனை பகுதியில் நடைபெற உள்ள பொங்கல் பண்டிகை விழாவில் பங்கேற்பதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தார்.

பின்னர், கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவரை துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மரியாதை செலுத்தி வரவேற்றனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு . வடநேரே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது வருவாய் துறை அலுவலர்கள், பாஜகவினர் உடனிருந்தனர். குமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் அருமனையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

பொங்கல் பண்டிகை விழாவில் தமிழிசை சவுந்தரராஜன்

இதையும் படிங்க: 'பழைய துணி கொண்டு வந்தால் துணிப்பை தருகிறோம்' - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதுத்திட்டம்

For All Latest Updates

TAGGED:

Governer

ABOUT THE AUTHOR

...view details