தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி நிதி நிறுவனம் மூலம் ரூ. 10 கோடி மோசடி: நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு தீவிர விசாரணை! - kanyakumari money cheating issue

குமரி: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ. 10 கோடி வரை மோசடி செய்த மூன்று நபர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு தீவிர விசாரணை
நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு தீவிர விசாரணை

By

Published : Jan 5, 2020, 7:16 AM IST

தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட 'சன் ஸ்டார் அக்ரோ பார்ம்' நிதி நிறுவனத்தில், சுமார் ஆயிரத்து 600 பேர் மாதாந்திர தவணைமுறையில் பணம் செலுத்திவந்தனர்.

இந்நிலையில், அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் பணம் செலுத்திவந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. போலியான நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்திருப்பது கடைசியாகத்தான் பொதுமக்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் நாகர்கோவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் செய்தனர். பின்னர் பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல நபர்களிடமிருந்து ரூ. 10 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி நிறுவனத்தை நடத்தி மக்களை ஏமாற்றிய பிரவீன், பேச்சிப்பாறையைச் சார்ந்த சோபன், ரதீஷ் ஆகிய மூவரை காவல் துறைனர் கைதுசெய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்போது, நாகர்கோவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறை மதுரை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அவர்களை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details