ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆன்லைன் வகுப்பு வசூலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை' - நாகர்கோவில்

கன்னியாகுமரி: கல்வியை வியாபாரமாக்கி ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் கட்டாய வசூலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனித பாதுகாப்புக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனித பாதுகாப்பு கழகம்
மனித பாதுகாப்பு கழகம்
author img

By

Published : Jun 16, 2020, 12:02 PM IST

கன்னியாகுமரி மாவட்ட மனித பாதுகாப்புக் கழகம் அமைப்பைச் சார்ந்தவர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டத்தில் கரோனா தடை உத்தரவு காரணமாக எண்ணற்ற தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வறுமையை சந்தித்துவருகின்றனர். இந்த நிலையைக் கருத்தில்கொண்டு கல்விக் கட்டணங்கள் யாரும் செலுத்த தேவையில்லை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாவட்டத்தில் தடை உத்தரவை மதிக்காமல் கல்வியை வியாபாரமாக்கி தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் பெற்றோர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டுவருகின்றன.

இதுபோன்ற பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details