கன்னியாகுமரி:குமரி மாவட்டம் தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியில் இருந்த மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த வில்சன் என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர்.
இது சம்பந்தமாக அப்துல் சலீம், தபுபீக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகளை காவல்துறையினர் அப்போதே கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.