கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு அடுத்த செம்மங்கலை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ் (24). இவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “என் தாயார் சந்திரிகா (50), கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
அங்கு ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி ரத்தம் செலுத்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 26ஆம் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அவருக்கு கரோனா இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்ததால் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், கடந்த 3ஆம் தேதி அவருக்கு கரோனா இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்ததையடுத்து அன்றைய தினமே மாலை வழக்கமான வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று (அக்.04) காலை என் தாயாருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மறுநாள் வீட்டுக்கு போகலாம் எனத் தெரிவித்தார்.