கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி மேரிஜெயா அமுதா (45). இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த மெர்லின்ராஜ் என்ற முன்னாள் ராணுவ வீரர் நகையைப் பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மேரி ஜெயா கூச்சலிடவே, நகைகளுக்காக அவரை குளத்தில் தள்ளிவிட்டு மெர்லின்ராஜ் தப்பியோடினார்.
மெர்லின்ராஜை விரட்டி பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் குளத்திற்குள் தள்ளிவிடப்பட்ட மேரிஜெயாவைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் இன்று உடற்கூராய்வு செய்யப்பட்டது.