தமிழ்நாடு

tamil nadu

கேரளாவிற்கு கடத்த முயன்ற மூன்று டன் ரேசன் அரிசி பறிமுதல் !

By

Published : Oct 2, 2019, 12:02 AM IST

கன்னியாகுமரி: கருங்கல் அருகே டெம்போ வேனில் கேரளாவிற்கு கடத்த முயன்ற மூன்று டன் எடையுள்ள ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புத்துறையினர் கைப்பற்றினர்.

ration rice smuggling to kerala three person were arrested

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரயில், பேருந்து, சொகுசு கார்கள், மினி வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு சர்வ சாதாரணமாக தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு சில கடத்தல்கள் மட்டுமே தடுக்கப்பட்டு பிடிக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தடையின்றி தொடர்ந்து ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்திச் செல்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மூன்று டன் அரிசி

இந்நிலையில் கருங்கல் அருகே மேல குறும்பணையில் இருந்து கேரளாவிற்கு சென்ற டெம்போ வேனை சந்தேகத்தின் அடிப்படையில் உணவு கடத்தல் தடுப்புத்துறை பறக்கும் படை அலுவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி வேனில் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து டெம்போ வேன் மற்றும் அதில் இருந்த மூன்று டன் ரேஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த, சௌகத்து(30), அஜ்மல்கான் (40), நிஷாத் (25) ஆகிய மூன்று பேரையும் உணவு கடத்தல் தடுப்புத்துறை அலுவலர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தும் கடத்தல்காரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details