தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்தப் பொருள்களை சிலர் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
வாகன தணிக்கையில் ஈடுபட்ட அலுவலர்கள்:
இதனைத் தடுக்க , உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருடன் இணைந்து மாவட்ட வருவாய் துறை அலுவலர்களும் பறக்கும் படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் வருவாய் துறை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை மறைத்தனர்.