கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் தனியார் நிறுவனம் நடத்திவரும் டேவிட் என்பவரிடம் இரண்டு வெளிநாட்டவர் 10 ஆயிரம் கொடுத்துவிட்டு சில்லறை பெற்றுக்கொண்டு, பேருந்தில் வேறு இடம் செல்வதாகக் கூறி வெளியே சென்றனர். ஆனால், அவர்கள் பேருந்தில் செல்லாமல் காரில் ஏறுவதைப் பார்த்த கடைக்காரர் சந்தேகம் அடைந்தார்.
பின்னர் தனது கடையில் இருந்த கல்லாவைப் பார்த்தபோது, அதில் வைத்திருந்த ஆயிரக்கணக்கான பணம் காணாமல் போனது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் காவல் துறையினருக்குத் தகவலளித்தார். இதனையடுத்து வெளிநாட்டவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த ரிஸா, மிசாம் என்று அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்றும் தெரியவந்தது.