தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் கொலை: குற்றவாளிகளுக்குப் போலீஸ் வலை! - கன்னியாகுமரி குற்றச் செய்திகள்

குமரி: நாகர்கோவில் அருகே கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணைக் கொலை செய்த குற்றவாளிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Kanniyakumari women murder
Women stabbed death

By

Published : Aug 6, 2020, 3:50 PM IST

Updated : Aug 6, 2020, 4:39 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம், வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர், நீலாவதி (42) . அப்பகுதியில் உள்ள பேக்கரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

நீலாவதி அவரது கணவர் ராமதாஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து அவரது ஒரே மகனான அஜித் என்பவருடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை (ஆகஸ்ட் 6) நீலாவதியும் அவரது மகனும் வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, நீலாவதி கழுத்தில் குத்துபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஆசாரிப்பள்ளம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நீலாவதியின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் மகன் இல்லாத நிலையில், யாரேனும் நள்ளிரவில் புகுந்து கொலை செய்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், நீலாவதியின் மகன் அஜித் காணாமல் போன நிலையில் அவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

Last Updated : Aug 6, 2020, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details