மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து " ஒரே இந்தியா,ஒரே தேசம் " என்ற ஒற்றுமை உணர்வை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜீப் பயணம் தொடங்கியது. இந்த விழிப்புணர்வு பயணம் கன்னியாகுமரி தொடங்கி நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து 11 மாநிலங்களைக் கடந்து காஷ்மீரைச் சென்றடைய உள்ளது.
" ஒரே இந்தியா, ஒரே தேசம் " - தொடங்கிய 7,000 கி.மீ., விழிப்புணர்வு பயணம்! - kanniyakumari
கன்னியாகுமரி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு "ஒரே இந்தியா, ஒரே தேசம்" என்ற ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பயணம் தொடங்கியது.
![" ஒரே இந்தியா, ஒரே தேசம் " - தொடங்கிய 7,000 கி.மீ., விழிப்புணர்வு பயணம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4624172-thumbnail-3x2-jeep.jpg)
awareness
ஒரே இந்தியா ஒரே தேசம் விழிப்புணர்வு பயணம்
இந்த விழிப்புணர்வு ஜீப் பயணத்தின் போது " ஒரே இந்தியா, ஒரே தேசம் " என்ற கருத்தை வலியுறுத்தி பல்வேறு குறும்படங்கள், இசை நிகழ்ச்சிகளைப் பயணப் பாதைகளில் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.
இதையும் படிக்க:சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள காந்தி மண்டபம்! - அலட்சியம் காட்டும் அரசு