தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் - chennai district news

கன்னியாகுமரி: மத்திய அரசு செவிலியருக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

By

Published : Jan 29, 2021, 2:09 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில இணை செயலாளர் ஜீவா ஸ்டாலின் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் இன்று (ஜன.29) மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மாநில செவிலியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

கரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட செவிலியர்களுக்கு இழப்பீடு, பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details