தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 7, 2019, 6:56 PM IST

ETV Bharat / state

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலி!

நாகர்கோவில்: குமரி மாவட்டம் அடுத்த கருங்கல் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மின்வாரிய ஊழியர் பலி

குமரி மாவட்டம், நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் (44). இவருக்கு பிந்து என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். ராபர்ட் கருங்கல் மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேனாக பணிபுரிந்துவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று கருங்கல் அரசு மருத்துவமனை அமைந்துள்ள சுண்டவிளை பகுதியில் மின்னழுத்தம் குறைபாடு இருப்பதாக, அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த மின்மாற்றியில் ஏறி மின்னழுத்த குறைபாட்டை சரி செய்யும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக, உடலில் மின்சாரம் பாய்ந்து, கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த கருங்கல் காவல் துறையினர், மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details