தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 17, 2020, 3:55 PM IST

ETV Bharat / state

தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி - 300க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய அளவில் உயர்வகை நாய்கள் கண்காட்சியில் கோவா, மும்பை, சென்னை, கொச்சின் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 300 நாய்கள் பங்கேற்றன.

nationwide-dogs-exhibition-over-300-dogs-participate
nationwide-dogs-exhibition-over-300-dogs-participate

கன்னியாகுமரி மாவட்ட கேனல் கிளப் சார்பாக 17ஆவது அகில இந்திய அளவிலான உயர்வகை நாய்கள் கண்காட்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கண்காட்சியில், உயர்வகை நாய்களான பக், ஜெர்மன் ஷெப்பேர்டு, ரோடுசியன், ராக் ரெய்லர் உள்ளிட்ட 41 விதமான அரிய வகை நாய்கள் உட்பட 300 நாய்கள் பங்கேற்றன.

மேலும், கோவா, மும்பை, சென்னை, கொச்சின் உள்ளிட்ட இந்தியா முழுவதுமிலிருந்து நாய்கள் கண்காட்சிக்கு கொண்டுவரப்பட்டன. அதுமட்டுமின்றி கன்னி, கோம்ப, ராஜபாளையம், சிப்பி பாறை உள்ளிட்ட நாட்டு ரக நாய்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றன.

தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி

கண்காட்சியில் இடம்பெற்ற ஒவ்வொரு நாயும் தன் வளர்ப்பாளர் கட்டளைகளுக்கு கீழ்படிதல் உள்ளிட்டவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க: நாய் கூறும் கதை - 'அன்புள்ள கில்லி' மோஷன் போஸ்டர் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details