கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு மானூர் பகுதியைச் சேர்ந்தவரான டேவிட்ராஜ், வாள் சண்டை விளையாட்டில் தேசிய அளவில் பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். இந்நிலையில், திருவட்டாறு காவல் ஆய்வாளர் ரவீந்திரன் முன்பகை காரணமாக தன்னை கொலை செய்யும் நோக்கில் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
"திருவட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் என்னை நிரந்தரமாக ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார். முளகுமூடு பகுதியில் செயல்பட்டுவரும் டிராவல்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேட்டை நான் தட்டிக் கேட்டதால் அதன் உரிமையாளர்கள் தூண்டுதலின் பேரில் காவல் ஆய்வாளர், காவல்துறையினர் என்னை கடுமையாகத் தாக்கினர்.