கன்னியாகுமரி:தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் இனிப்பு கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் ஆவின் பாலகங்களிலும் பால் பொருட்கள் மட்டும் இன்றி, பல்வேறு உணவுப் பொருட்களும் விற்பனை சூடு பிடித்துள்ளது.
அந்த வகையில் கன்னியாகுமரியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த சாஜன் என்பவர், நாகர்கோவில் ஆவின் பாலகத்தில் குலாப் ஜாமூன் பாக்கெட்டை வாங்கினார். அந்த பாக்கெட்டை வீட்டிற்கு சென்று பிரித்த பார்த்தபோது, குலோப் ஜாமூனில் பூஞ்சைகள் படர்ந்து காணப்பட்டுள்ளது.