தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 1, 2020, 2:01 PM IST

Updated : Feb 1, 2020, 2:17 PM IST

ETV Bharat / state

குமரியில் சிஏஏவை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Protest against caa Kanniyakumari Islams Protest against caa Nagarcoil Islams Protest against caa Islams Protest against caa நாகர்கோவில் இஸ்லாமியர்கள் சிஏஏ எதிர்த்து போரட்டம் கன்னியாகுமரி இஸ்லாமியர்கள் சிஏஏ எதிர்த்து போரட்டம் இஸ்லாமியர்கள் சிஏஏ எதிர்த்து போரட்டம்
Kanniyakumari Islams Protest against caa

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும், நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இச்சட்டத்திற்கு எதிராக தில்லி உள்பட பல்வேறு பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குமரி மாவட்டம், நாகர்கோவிலில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில், குடியுரிமை திருத்தத்தைச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலை அடுத்த இளங்கடை திடலில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தமிழ், அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள இஸ்லாமியர்கள்
Last Updated : Feb 1, 2020, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details