தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகள் சாவில் சந்தேகம்: காதலன் விஷம் கொடுத்திருக்கலாம் என தாய் போலீஸில் புகார் - விஷம் அருந்தி தற்கொலை

நித்திரவிளை அருகே தனது மகள் அபிதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி தாய் தங்கபாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

மகள் சாவில் மர்மம்
மகள் சாவில் மர்மம்

By

Published : Nov 7, 2022, 8:42 PM IST

கன்னியாகுமரி:நித்திரவிளை அருகே வாவறை பகுதியைச்சேர்ந்தவர் சின்னப்பர்(56). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி தங்கபாய்(51) என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வரும் நிலையில் பள்ளியில் படிக்கும் போதே நித்திரவிளை பகுதியைச்சேர்ந்த வருண் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்குமுன் வருணின் குடும்பத்தினர், இவர்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த 1ஆம் தேதி காலை திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளதாக கூறியதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் மாணவியை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

மூன்று நாட்கள் அங்கு சிகிச்சைப்பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததைத்தொடர்ந்து 4ஆம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த மாணவி, நேற்று முன்தினம் இரவு சிகிச்சைப்பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து மாணவியின் தாயார் தங்கபாய் நித்திரவிளை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் காதலன் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விஷம் கொடுத்திருக்கலாம் அல்லது காதலன் ஏமாற்றியதால் மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குமரியில் ராஜீவ் காந்தி சிலையை உடைக்க முயற்சி.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details