தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை மறியலுக்கான முன்னறிவிப்பு மனு - ஆட்சியரிடம் வழங்கிய குமரி மக்களவை உறுப்பினர்! - சாலை மறியலுக்கான முன்னறிவிப்பு

குமரி: மாவட்டத்திலுள்ள சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி நடத்தப்படும் சாலை மறியலுக்கான முன்னறிவிப்பு மனுவைக் குமரி மக்களவை உறுப்பினர் வசந்த குமார் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

mp vasantha kumar give protest petition to collecto

By

Published : Nov 5, 2019, 7:55 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல் கிணறு வரை தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் தினம் தினம் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்தச்சூழலில் சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி வருகின்ற 16ஆம் தேதி களியக்காவிளை, அழகிய மண்டபம், நாகர்கோவில், ஆரல் வாய்மொழி உட்பட ஐந்து இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகக் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர், கன்னியாகுமரியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து கூட்டாக அறிவித்திருந்தனர்.

போராட்ட முன்னறவிப்பை ஆட்சியரிடம் வழங்கிய எம்.பி., வசந்த குமார்

அந்தப் போராட்டத்திற்கான முன்னறிவிப்பு மனுவைக் குமரி மாவட்ட ஆட்சியரிடம் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் இன்று வழங்கினார். அப்போது, நாகர்கோவில், குளச்சல் மற்றும் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அலட்சியத்தால் தொடரும் அவலம் - நான்கு நாட்களில் எட்டு குழந்தைகள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details