கன்னியாகுமரி:உலக கல்லீரல் அழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28ஆம் தேதி அனுசரிக்கபட்டு வருகிறது கல்லீரல் அழற்சி அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக கல்லீரல் அழற்சி தினம் மற்றும் 75ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி தாளாளர் லீலா ராஜேத்தின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமை தக்கலை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சாஸ்தா தொடங்கிவைத்தார்.