தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2020, 3:43 AM IST

ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு!

கன்னியாகுமரி: அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு சரியாக உணவு வழங்கப்படுவதில்லை என வந்த புகாரைத் தொடர்ந்து சட்டப் பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

MLA Inspection To Government Hospital In Kanniyakumari
MLA Inspection To Government Hospital In Kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 434 பேர் கரோனா வைரஸூக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு முறையாக உணவுகள், மருந்துகள் வழங்குவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து நேற்று முன்திம் மாலை நான்கு மணிக்கு நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஆர்.எம்.ஒ உள்ளிட்ட மருத்துவ அலுவலர்களிடம் நோயாளிகளுக்கு உணவுகள் வழங்குவது குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க:பாரத் பெட்ரோலியம் திட்டம்... விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் கொடுந்துயரம்: ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details