கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக மணல், கருங்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது என தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.
செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல் - கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்
கன்னியாகுமரி: பொய்கை அணை பகுதியில் செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 14 டெம்போ, 3 ஜெ.சி.பி. வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
![செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல் Mineral resources smuggling 6 arrested Vehicles confiscated in kumari](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10283287-477-10283287-1610956037149.jpg)
Mineral resources smuggling 6 arrested Vehicles confiscated in kumari
இந்நிலையில், பொய்கை அணை பகுதிகளில் செம்மண் கடத்துவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல்துறையினர் அணை அருகே செம்மண் அள்ளிக் கொண்டிருந்த வாகனங்களை சுற்றி வளைத்தனர்.
பொய்கை அணை பகுதியில் செம்மண் கடத்தல்
அப்போது மண் அள்ளிக் கொண்டிருந்த 14 டெம்போக்கள், 3 ஜெ.சி.பி. இயந்திர வாகனங்களை பறிமுதல் செய்த காவலர்கள், மணல் கடத்தில் ஈடுபட்ட ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட்டை சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர்.