தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பாஸை ரத்து செய்ய வியாபாரிகள் சங்கம் கோரிக்கை - The e-pass must be canceled

கன்னியாகுமரி: சுற்றுலாப் பயணிகள் வருகை தர வசதியாக இ-பாஸை ரத்து செய்து ரயில்களை உடனடியாக இயக்க வேண்டுமென கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

kanniyakumari
kanniyakumari

By

Published : Sep 5, 2020, 2:34 PM IST

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, கோயில்கள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல போக்குவரத்து சேவை இயங்கி வருகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பகுதியில் வழக்கம்போல் கடைகளும், தங்கும் விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கடை நடத்தி வருபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கன்னியாகுமரி மிகவும் கலையிழந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கன்னியாகுமரி வியாபாரிகள் கோரிக்கை

மேலும், மத்திய, மாநில அரசுகள் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் முறையை ரத்து செய்து ரயில் போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டுமென கன்னியாகுமரி கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:'கடன் அட்டை மட்டுமல்ல, கைலாசா பொற்காசுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்!'

ABOUT THE AUTHOR

...view details