தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 22, 2022, 4:14 PM IST

ETV Bharat / state

பேருந்துகளை வெளியே விடாமல் பணிமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

தொழிலாளர் விரோத செயல்களை கண்டித்து நாகர்கோவிலில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு பணிமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

கன்னியாகுமரி:மாவட்ட அரசு போக்குவரத்து கழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கத்தினர் இன்று நாகர்கோவிலில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பேருந்துகளை வெளியே விடாமல் முடக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டக்காரர்கள், திமுக அரசு பதவிக்கு வந்ததுமே ஆளுங்கட்சி என்று அத்துமீறலை தொடங்கியுள்ளது. தொழிற்சங்கங்களை முடக்கி வருகின்றனர். திமுக தொழிற்சங்கத்தினர் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கையகப்படுத்தி பிற தொழிற்சங்கங்களின் உரிமைகளை பறிக்கின்ற நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

இதனை கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது என்றனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் பணிமனையில் இருந்து வழிந்தடங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்க முடியாமல் முடங்கின.

இதையும் படிங்க:தேடப்படும் நபராக செல்வகுமார் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details