கேரளாவிலிருந்து இறைச்சிக் கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளைக் கொண்டு வந்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் கேரள மாநில ஓட்டுநர்கள் கொட்டிச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று (அக்.19) மார்த்தாண்டம் மேம்பாலம் தொடங்கும் பகுதியான குழித்துறை, தாமிரபரணி ஆற்றுப்பாலம் முதல் பாலத்தின் இறுதிப் பகுதி வரை இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டின் கொம்பு, கால்கள் உள்பட எலும்புகளை அடையாளம் தெரியாத நபர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
இத்தகவல் தெரிந்து அங்கு சென்ற மார்த்தாண்டம் காவல் துறையினர், மேம்பாலத்தில் வீசிச் செல்லப்பட்ட மாட்டிறைச்சிக் கழிவுகளை காவல் துறை வாகனத்தில் சேகரித்து எடுத்துச் சென்றனர்.