தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2020, 12:00 PM IST

ETV Bharat / state

கணவருடன் தகராறு - பெண் மாயம்

கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் அருகே கணவருடன் தகராறு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி பெண் மாயமானதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Married women missing
Married women missing

கன்னியாகுமரி மாவட்டம் மேல மணக்குடி பகுதியை சேர்ந்தவர் சகாய டிலானி (28). இவரது கணவர் ஆரோக்கியதாசன். இந்த தம்பதியருக்கு ஆரோக்கிய ஜினோத் (10) என்ற மகனும், சகாய ஜிகா (11) என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து, கணவர் ஆரோக்கியதாசனிடம் தகராறு செய்துகொண்டு ஒரு வருடம் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருடன் சகாய டிலானி குடும்பம் நடத்திவந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் சகாய டிலானியிடம் சமரசம் பேசி கணவர் ஆரோக்கியதாசனுடம் வாழ ஏற்பாடு செய்துள்ளனர்.

பின்னர் கடந்த இரண்டு வாரமாக கணவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்த சகாய டிலானி நேற்று (செப்.30) மாலை முதல் மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது கணவர் ஆரோக்கியதாசன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சகாய டிலானியை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details