நாகர்கோவிலில் கன்னியாகுமரி அனைத்து ஜாமத் கூட்டமைப்பின் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கண்டன உரை நிகழ்த்தினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குடியுரிமை திருத்தச் சட்ட மசோதவை பாஜக மக்களவையில் நிறைவேற்றிய சமயத்தில் தான் ஜார்க்கண்ட் தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மக்கள் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் சரியான பாடம் புகட்டியள்ளனர்.