கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் இன்று (அக்.12) ரயில் மோதி குழித்துறை அருகே பாகோடு, கோவில்வட்டம் பகுதியை சேர்ந்த சசி (44) என்ற நபர் உயிரிழந்து ரயில் நிலைய தண்டவாளத்தில் கிடந்துள்ளார்.
இந்த நிலையில் சடலத்தை அப்புறப்படுத்த நாகர்கோவிலில் இருந்து ரயில்வே காவல்துறையினர் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில்வே பணியாளர்களை ஏற்றிவரும் சிறப்பு ரயில் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.