தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரி: பாறையாற்றின் கரையோரம் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

By

Published : Mar 9, 2021, 11:03 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதி சாரத்தில் இருந்து வீரநாராயண மங்கலம் செல்லும் சாலையோரம் பாறையாறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரம் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் ஆரல்வாய்மொழி காவல் துறையினருக்கு இன்று (மார்ச் 9) தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து நாகர்கோவில் டிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அதில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல், பாதி எரிந்த நிலையில் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், "இறந்த நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காலிங்கராயன் வாய்க்காலில் இளம் காவலாளியின் சடலம் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details