தமிழ்நாடு

tamil nadu

கொரோனாவால் பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ள குமரி விவசாயிகள்!

By

Published : Feb 26, 2020, 10:25 PM IST

குமரி : கொரோனா வைரஸ் பாதிப்பால் குமரி மாவட்டத்திலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த கிராம்பு கடும் சரிவை சந்தித்து பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Kumari farmers who have lost several crores of rupees due to coronavirus
கொரோனா வைரஸ் பாதிப்பு: பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள குமரி விவசாயிகள்!

கடந்த சில நாள்களாகச் சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. அதன் காரணமாக குமரி மாவட்டத்திலிருந்து சீன நாட்டுக்கு பல நூறு டன் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த உலகப்புகழ்பெற்ற கிராம்பு ஏற்றுமதியும் முற்றுமுழுதாகத் தடைப்பட்டுள்ளது.

இதனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கிராம்பு அளவைப் பொறுத்து உள்ளூரில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுவந்த கிராம்பின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி உள்நாட்டு மொத்த கிராம்பு வியாபாரிகள் கிராம்பு விலையை குறைத்து விலை பேசி வாங்கிவருகின்றனர்.

கொரோனாவால் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள குமரி விவசாயிகள்!

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த குமரி மாவட்ட கிராம்பு விவசாயிகள், “ சீன ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதால், 750 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவந்த ஒரு கிலோ கிராம்பு 500 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இதனால் கிராம்பு தொழிலை நம்பி வாழ்ந்துவரும் பல ஆயிரக்கணக்கான கிராம்பு சிறு, குறு விவசாயிகள், வியாபாரிகள் பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளார்கள்.

மேலும் சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அந்நாடு மீளும்வரை மத்திய, மாநில அரசுகள் ஏற்பட்டுள்ள கிராம்பு ஏற்றுமதி சரிவை தடுத்து நிறுத்த உதவுவதோடு பொருளாதார இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : 'மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்... ஜெயலலிதாவிற்குச் செய்யும் நன்றிக்கடன்!'

ABOUT THE AUTHOR

...view details