தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டில் பூரண மதுவிலக்கு - முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த குமரி அனந்தன்

கன்னியாகுமரி: வருகிற புத்தாண்டில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவர காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By

Published : Oct 4, 2019, 11:52 PM IST

kumari-ananthan

இதுகுறித்து அவர் கூறுகையில்,

'வரும் புத்தாண்டு முதல் ஆந்திரா மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தியாவிலேயே முதன்முதலாக சேலத்தில் கடந்த 1917 ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தியவர் அப்போதைய நகரசபை தலைவர் ராஜாஜி.

எனவே, அந்த மாவட்டத்திலிருந்து தற்போது முதல்வராகி இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் வரும் புத்தாண்டு முதல் மதுவை ஒழித்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன்

இதையும் படிங்க:

காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 4 பேர் கைது, 64 பாட்டில்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details