தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 3, 2020, 2:13 PM IST

Updated : Jan 3, 2020, 3:02 PM IST

ETV Bharat / state

குமரியில் ஒரே வீட்டில் 2ஆவது முறையாக அரங்கேறிய கொள்ளை சம்பவம்

கன்னியாகுமரி: ஒற்றைப்புளி பகுதியில் ஒரே வீட்டில் இரண்டாவது முறையாக வீட்டை உடைத்து பணம், சொத்து பத்திரம் ஆகியவற்றை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி
kanyakumari theft

கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றைப்புளி பகுதியைச் சேர்ந்தவர் குட்டப்பன்நாயர். இவரது வீடு ஒற்றைப்புளி பிரதான சாலையில் உள்ளது. இன்று காலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்ட அருகில் உள்ளவர்கள் வீட்டின் உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தனர்.

கன்னியாகுமரி காவல் துறைக்கு கொடுத்த தகவலின்பேரில் காவல் துறையினர் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டிலிருந்த கண்காணிப்புக் கேமராவை உடைத்துவிட்டு பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் தண்ணீர் மோட்டாரை இயக்கி சத்தம் ஏற்படுத்திவிட்டு பீரோவை உடைத்து உள்ளேயிருந்த சொத்து பத்திரம், வங்கி கணக்கு எண் புத்தகம், 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்ததோடு கண்காணிப்புக் கேமராவின் வன்தட்டையும் (ஹார்டு டிஸ்க்) எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது.

காவல் துறையினர் விசாரணை

இதே வீட்டில் கடந்த மே மாதமும் உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவிலிருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அப்போதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இதுவரை யாரையும் கைதுசெய்யாத நிலையில் மீண்டும் அதே வீட்டில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஸ்டேசன்ல என் படம் ஏற்கனவே இருக்கு! சிக்கிய பைக் திருடி.

Last Updated : Jan 3, 2020, 3:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details