தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்கிய ஆசிரியர்கள் - பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்கிய ஆசிரியர்கள்

கன்னியாகுமரி:நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளின் உடல்நலம் பேண ஆசிரியர்கள் சார்பில் சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

kanyakumari teachers given nutrition food for female students
kanyakumari teachers given nutrition food for female students

By

Published : May 11, 2020, 4:33 PM IST

கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் சத்தான உணவு பொருள்களை உட்கொள்ளவேம்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், மக்கள் பலர் ஊரடங்கினால் வேலையிழந்து அன்றாட தேவைகளுக்கே அரசை எதிர்பார்ததுவரும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு கொண்டை கடலை, கோதுமை மாவு, பயறு வகைகள் உள்பட 15 வகையான உணவு பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கியுள்ளனர்.

ஊட்டச்சத்துப் பொருள்களை பெற்றுக்கொண்ட மாணவிகள்

மேலும், கரோனா தொற்று குறித்தும், தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டியவை என்ன? - ஊட்டச்சத்து நிபுணரின் டிப்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details