தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை - Kanyakumari tasmac theft

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

tasmac theft
Kanyakumari tasmac theft

By

Published : Mar 1, 2020, 9:34 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சங்குதுறை பீச் செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. கடந்த வியாழக்கிழமை (பிப். 27) பணியாளர்கள் பணிமுடிந்து கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.

நேற்று முன்தினம் காலை பணியாளர்கள் வழக்கம்போல பணிக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்து ஐந்சு பெட்டிகளிலிருந்த உயர் ரக மதுபானங்களை எடுத்துச் சென்றதோடு, உணவுப்பொருள்கள், சிகரெட் பாக்கெட், பணம் போன்ற சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை

இது பற்றிய தகவல் கிடைத்த கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் சுசீந்திரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு, கைரேகை நிபுணர்களுடன் வந்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:பணத்திற்காகக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details