கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ். இவருக்கு சொந்தமான பசு ஒன்று இருக்கிறது. சில தினங்களில் கன்று ஈனும் நிலையில் உள்ள சினை பசுவான அது அப்பகுதியில் புல் மேய்ந்துக் கொண்டிருந்தது.
அப்போது, தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள், பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டு இருந்த திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் தொட்டிக்குள் சினை பசு தவறி விழுந்தது. தவறி விழுந்த பசு உயிருக்கு ஆபத்தான நிலையில் கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியே வர அலறியது.