தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
பகல் நேரங்களில் சாலையில் கானல் நீர் தெரியும் அளவிற்கு வெப்பம் உச்ச நிலையை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது இல்லை. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயில் 100 டிகிரியை தாண்டியது.