சுசீந்திரம் வழியாக வரும் பழையாற்றில் வடக்கு தாமரைக் குளம் பகுதியில் பிள்ளை பெத்தான் அணை என்ற ஒரு சிறிய நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தைச் சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் நேற்று பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், ’சுசீந்திரம் வழியாக வரும் பழையாற்றில் எப்பொழுதும் அதிகளவில் நீர் வரத்து உள்ளது. இந்த நீர் அத்தனையும் மணக்குடியில் உள்ள பொழி முகத்தின் வழியாக வீணாகக் கடலில் கலந்து விடுகிறது.
பணியாற்று பகுதியில் பிள்ளைபெத்தான் அணை என்று ஒரு சிறிய நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கம் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன நிலங்கள் மட்டும்தான் பயன்பெறமுடிகிறது. எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கும், மிஷன்பத்திற்கும் இடையில் பெரிய அளவில் ஒரு தடுப்பணை அமைத்தால் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதிகளில் உள்ள ஊராட்சி பேரூராட்சிகளிலும் உள்ள குடிநீர் பிரச்னைகளையும் தீர்க்க முடியும்.