தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனம் விபத்து - இளம்பெண் உயிரிழப்பு - kanniyakumari women death today

கன்னியாகுமரி: நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இளம்பெண் பலி
இளம்பெண் பலி

By

Published : Jan 9, 2020, 6:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மணலிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா ராணி (30). இவர் இன்று காலை மணலி கரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக நிலை தடுமாறி அவர் நடைமேடையில் மோதி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்டெல்லா ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ஸ்டெல்லா ராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் பலி

மேலும், இந்த சம்பவம் குறித்து வடசேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: கணவர் கண்முன்னே பெண் உயிரிழப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details