தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 2, 2019, 10:13 PM IST

ETV Bharat / state

அலட்சிய சிகிச்சையால் குழந்தை இறப்பு: மருத்துவர்கள் மீது பெற்றோர் புகார்!

கன்னியாகுமரி: மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின் போது குழந்தை இறந்ததாகக் கூறி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கன்னியாகுமரி மாவட்டம், சுருளகோடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ். இவரது மனைவி சபிதா. இவருக்கு கடந்த 27ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சபிதாவை பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் சபிதாவிற்கு சுகபிரசவம் ஆகிவிடும் என செவிலியர்களிடன் கூறிவிட்டு மருத்துவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து, சரியான முறையில் சிகிற்சை அளிக்காததால் குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு பிறந்த குழந்தை மூச்சு விட முடியாததால், சில மணி நேரத்தில் இறந்துள்ளது.

பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

இந்நிலையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல், அலைக்கழித்ததால் குழந்தை இறந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபிதாவின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details