தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - கன்னியாகுமரியில் தொடர் மழை

கன்னியாகுமரி: மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பிவருகின்றன. இம்மழையால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை
தொடர்மழை

By

Published : Sep 16, 2020, 9:29 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.

அதேபோல கால்வாய்கள் வழியாக வரும் தண்ணீர் மூலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களும் நிரம்பிவழிகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேநேரத்தில் தொடர்மழை காரணமாக பொதுமக்கள் தங்கள் பணிகளுக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீர் காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details