கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் கரோனா நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வள்ளன்குமாரன்விளையிலுள்ள தெருவில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், கரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்ட கடைகள், முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் 3ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதித்தார். அதேபோல, அவிட்டம் மகாராஜா காப்பக மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும், முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.