தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூறாவளியால் பள்ளியின் மேற்கூரைகள் சேதம்! - Government school

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு வீசிய சூறாவளி காற்றினால் ஈசாந்திமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

சூறாவளியால் பள்ளியின் மேற்கூரைகள் சேதம்

By

Published : May 1, 2019, 7:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு அடித்த பலமான சூறாவளி காற்றினால் ஈசாந்திமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளி கட்டடத்தின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது.

மேற்கூரை இடிந்து விழுந்ததில், வகுப்பறைகளுக்குள் இருந்த நாற்காலிகள், மேசைகள், பாடபுத்தங்கள், மின்விசிறிகள் உட்பட பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கோடை விடுமுறை என்பதாலும், நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாலும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சூறாவளியால் பள்ளியின் மேற்கூரைகள் சேதம்

மேலும், பள்ளி கட்டடம் கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பள்ளி கட்டடத்தை சீரமைத்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததாலே சூறாவளி காற்றில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details